மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சி…

 

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.94 லட்சம் கோடியை இழந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வேகம் குறைந்து இருப்பது, லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி. மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட 3 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் மகிந்திரா உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சி…
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,038 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,987 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.200.18 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.94 லட்சம் கோடியை இழந்தனர்.

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சி…
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,145.44 புள்ளிகள் சரிந்து 49,744.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 306.10 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,675.70 புள்ளிகளில் முடிவுற்றது.