முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 435 புள்ளிகள் வீழ்ச்சி

 

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 435 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது, கொரோனா வைரஸ் கவலை மீண்டும் எழுந்துள்ளது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 435 புள்ளிகள் வீழ்ச்சி
இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,183 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,777 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.204.12 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.80 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 435 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 434.93 புள்ளிகள் சரிந்து 50,889.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 137.20 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,981.75 புள்ளிகளில் முடிவுற்றது.