தொடர்ந்து 3வது நாளாக அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 379 புள்ளிகள் வீழ்ச்சி..

 

தொடர்ந்து 3வது நாளாக அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 379 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.32 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகள் புதிய உயரத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் புதிய முதலீடு செய்வதில் சிறிது தயக்கம் காட்டுகின்றனர். மேலும் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்வது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 379 புள்ளிகள் வீழ்ச்சி..
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,642 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,327 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.205.92 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.32 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 3வது நாளாக அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 379 புள்ளிகள் வீழ்ச்சி..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 379.14 புள்ளிகள் சரிந்து 51,324.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 89.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,119 புள்ளிகளில் முடிவுற்றது.