சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. பின்னர் சிறிது ஏற்றம் கண்ட போதிலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியது போன்ற காரணங்களால் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எஸ்.பி.ஐ. மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டம்..
பாரத ஸ்டேட் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,513 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,448 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 146 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.205.60 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.20 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 400.34 புள்ளிகள் சரிந்து 51,703.83 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 104.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,208.90 புள்ளிகளில் முடிவுற்றது.