5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.58 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 813 புள்ளிகள் உயர்ந்தது..

 

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.58 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 813 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 813 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்திலும் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் எதிரொலித்தது. மேலும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பல நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகள் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது. அதேசமயம், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததும் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.58 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 813 புள்ளிகள் உயர்ந்தது..
மத்திய பட்ஜெட்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.203.91 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 5) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.200.33 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.58 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.58 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 813 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 812.67 புள்ளிகள் உயர்ந்து 51,544.30 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 239.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,163.30 புள்ளிகளில் முடிவுற்றது.