சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தது…

 

சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.08 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. ஆனால் பின்னர் பங்கு வர்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தது…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,723 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,264 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 139 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.204.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.08 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 222.13 புள்ளிகள் உயர்ந்து 51,531.52 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 66.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,173.30 புள்ளிகளில் முடிவுற்றது.