தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தம்.. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தம்.. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடன் முடிவடைந்தது. இருப்பினும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.57 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சிறிய உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும், பின்னர் பங்கு வர்த்தகத்தில் கடும் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தம்.. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..
எச்.டி.எப்.சி. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,472 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,491 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 162 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.203.04 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.57 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தம்.. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.69 புள்ளிகள் சரிந்து 51,309.39 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 2.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,106.50 புள்ளிகளில் முடிவுற்றது.