சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது… ரூ.15 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

 

சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது… ரூ.15 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. ஆனாலும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் சிறிது நேரத்துக்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எஸ்.பி.ஐ. மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது… ரூ.15 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,197 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,030 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 124 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.239.40 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்ந்தது… ரூ.15 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.07 புள்ளிகள் உயர்ந்து 54,492.84 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 35.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,294.60 புள்ளிகளில் முடிவுற்றது.