ஏற்ற இறக்கத்தில் பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்…

 

ஏற்ற இறக்கத்தில் பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் சென்செக்ஸ் சிறிய சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டி.சி.எஸ். மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏற்ற இறக்கத்தில் பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்…
டி.சி.எஸ்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,963 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,240 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 107 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.241.53 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.03 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

ஏற்ற இறக்கத்தில் பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.77 புள்ளிகள் சரிந்து 55,944.21 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 10.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,634.65 புள்ளிகளில் முடிவுற்றது.