பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்தது..

 

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பங்கு வர்த்தகம் விறுவிறுவென உயர்ந்தது. பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் உயர்வுடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டைட்டன் உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டாக்டர்ரெட்டீஸ் நிறுவன பங்கின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேவேளையில், இண்டஸ்இந்த் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்தது..
சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,859 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,061 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.209.49 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.25 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.45 புள்ளிகள் உயர்ந்து 49,746.21 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 54.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,873.80 புள்ளிகளில் முடிவுற்றது.