சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.86 லட்சம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.86 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பாதகமான சூழ்நிலைகள் நிலவியபோதிலும், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிக்கை பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றங்களும் செய்யவில்லை. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர், என்.டி.பி.சி. மற்றும் டைட்டன் ஆகிய 3 நிறுவனங்களை தவிர மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.86 லட்சம் கோடி லாபம்
இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,839 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,109 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 184 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.208.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.86 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.86 லட்சம் கோடி லாபம்
இந்துஸ்தான் யூனிலீவர்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 460.37 புள்ளிகள் உயர்ந்து 49,661.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 135.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,819.05 புள்ளிகளில் முடிவுற்றது.