சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி லாபம்..

பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பங்கு வர்ததகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் சன்பார்மா உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் குறைந்தது.

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி லாபம்..
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,663 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,219 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 189 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.206.38 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.24 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.07 புள்ளிகள் உயர்ந்து 49,201.39 நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,683.50 புள்ளிகளில் முடிவுற்றது.