கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

 

கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா, அமெரிக்க பத்திரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நம் நாட்டில் சில பகுதிகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாக வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் இடர்பாடு அதிகரித்து வருகிறது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பத்திரங்களில் கிடைக்கும் ஆதாயம் அதிகரித்து வருவது, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கொரோனா வைரஸ் பரிசோதனை

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் அடுத்த வாரம் முதல் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. இதனால் முதலீட்டாளர்களின் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள். கடந்த மார்ச் 26ம் தேதியோடு நிறைவடைந்த கடந்த 15 தினங்களில் வங்கி திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்து புள்ளிவிவரங்கள், ஏப்ரல் 2ம் தேதியோடு நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வு

மேக்ரோடெக் டெவல்பர்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி முடிவடைகிறது. arbeque Nation Hospitality நிறுவனத்தின் பங்குகள் ஏப்ரல் 7ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா,சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை இந்த வாரம வெளியிடுகின்றன. இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.