2021 ஆம் ஆண்டு தேர்தலில் 100% மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர் : ரஜினிகாந்த்

 

2021 ஆம் ஆண்டு தேர்தலில்  100% மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர் : ரஜினிகாந்த்

மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசனும் நடிகர் ரஜினிகாந்தும் மக்களின் நலனுக்காக இணைவோம் என்று நேற்று தெரிவித்திருந்தனர்.

மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசனும் நடிகர் ரஜினிகாந்தும் மக்களின் நலனுக்காக இணைவோம் என்று நேற்று தெரிவித்திருந்தனர்.

rajini kamal

அதனை தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், நேற்று நான் பெற்ற விருதை என் தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவரிடம், கமல்- ரஜினி கூட்டணி இணைந்தால் யார் முதல்வராக போட்டியிடுவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அது தேர்தல் நேரத்தில் நம் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதை நான் இப்போது கூற விருப்பப்படவில்லை என்று பதில் அளித்தார். 

rajini

இதனையடுத்து, அவரிடம் ரஜினி- கமல் இணைந்து ஆன்மீக அரசியல் நடத்துகிறார்கள் என்று அமைச்சர்கள் கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, 2021 ல் நடக்கவிருக்கும் தேர்தலில் மக்கள் அதிசயத்தையும் அற்புதத்தையும் 100 சதவீதம் நிகழ்த்துவர் என்று பதிலளித்தார். அவரின், இந்த மறைமுகமான கருத்துகளின் மூலம் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.