சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டதால் இன்று வர்த்தகம் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் முதலீட்டாளர்கள் இருந்தனர். ஆனால் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவை சந்தித்தாலும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..
டெக் மகிந்திரா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக்மகிந்திரா, டைட்டன், நெஸ்லே இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.டி.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,238 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,373 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 160 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.13 ஆயிரம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 94.71 புள்ளிகள் உயர்ந்து 38,067.93 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,247.55 புள்ளிகளில் முடிவுற்றது.