சென்செக்ஸ் 95 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 95 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவு கண்டபோதிலும், முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. பல வாகன நிறுவனங்களின் விற்பனை நிலவரம் திருப்திகரமாக இல்லாதது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் எச்சரிக்கை காட்டியது போன்ற காரணங்களால் இறுதி பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

சென்செக்ஸ் 95 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி லாபம்..
டைட்டன்


சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன், டெக்மகிந்திரா, நெஸ்லே இந்தியா, மாருதி மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, பவர் கிரிட் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 95 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி லாபம்..
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி


மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,481 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,203 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 185 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.88 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ. 58 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 95 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி லாபம்..
சென்செக்ஸ் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 95.09 புள்ளிகள் சரிந்து 38,990.94 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 7.55 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,527.45 புள்ளிகளில் முடிவுற்றது.