5 நாளில் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம்… முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்..

 

5 நாளில் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம்… முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்..

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,457 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த திங்கள் முதல் வியாழன் வரையிலான 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவரம், சர்வதேச வங்கிகளில் நடைபெற்ற மோசடி அம்பலமானது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

5 நாளில் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம்… முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்..
கொரோனா வைரஸ் பரிசோதனை

கடந்த திங்கள் முதல் நேற்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.28 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 18ம் தேதி) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.02 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

5 நாளில் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம்… முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்..
மும்பை பங்குச் சந்தை

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,457.16 புள்ளிகள் குறைந்து 37,388.66 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 454.70 புள்ளிகள் சரிவு கண்டு 11,050.25 புள்ளிகளில் முடிவுற்றது.