4 தினங்களுக்கு பிறகு முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.49 லட்சம் கோடி லாபம்

 

4 தினங்களுக்கு பிறகு முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.49 லட்சம் கோடி லாபம்

தொடர் சரிவை சந்தித்து வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 835 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த சில தினங்களாக பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டு இருந்ததால் பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைந்து இருந்தது. இதனை முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்பாக கருதி முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சிறப்பான ஏற்றம் கண்டது.

4 தினங்களுக்கு பிறகு முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.49 லட்சம் கோடி லாபம்
பார்தி ஏா்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டி.சி.எஸ்., இண்டஸ்இந்த் வங்கி, எல் அண்டு டி, நெஸ்லே இந்தியா மற்றும் இன்போசிஸ் உள்பட அனைத்து நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது.

4 தினங்களுக்கு பிறகு முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.49 லட்சம் கோடி லாபம்
கோடக்மகிந்திரா வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,988 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 660 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.152.28 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.49 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.


.

4 தினங்களுக்கு பிறகு முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.49 லட்சம் கோடி லாபம்
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 835.06 புள்ளிகள் உயர்ந்து 37,388.66 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 244.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,050.25 புள்ளிகளில் முடிவுற்றது.