தொடர்ந்து 2வது நாளாக அடி வாங்கிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி நஷ்டம்..

 

தொடர்ந்து 2வது நாளாக அடி வாங்கிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி நஷ்டம்..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவு கண்டது அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது உள்ளிட்ட காரணங்களால் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்து. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டி.சி.எஸ்., மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி சுசுகி, இண்டஸ்இந்த் வங்கி, மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக அடி வாங்கிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி நஷ்டம்..
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 765 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,861 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.52 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.24 லட்சம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 2வது நாளாக அடி வாங்கிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 300.06 புள்ளிகள் சரிந்து 37,734.08 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 96.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,153.65 புள்ளிகளில் முடிவுற்றது.