சென்செக்ஸ் 134 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 134 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 134 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., பவர் கிரிட் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி, மாருதி, டைட்டன் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 134 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம்..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,311 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,429 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.02 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 134 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.03 புள்ளிகள் சரிந்து 38,845.82 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 11.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,504.95 புள்ளிகளில் முடிவுற்றது.