முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்தது..

 

முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டும் எழுவது தொடர்பான நம்பிக்கை குறித்த கவலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு குறைந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது மற்றும் பங்குகளில் முதலீடு செய்வதில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது.

முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்தது..
இன்போசிஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ் மற்றும் மாருதி ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட், எல் அண்டு டி, டி.சி.எஸ்., டாடா ஸ்டீல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்கின் விலையில் மாற்றம் இல்லை.

முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்தது..
பவர் கிரிட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,153 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,573 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 170 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.05 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.03 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்தது..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 323.00 புள்ளிகள் சரிந்து 38,979.85 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 88.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,516.10 புள்ளிகளில் முடிவுற்றது.