சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.79 ஆயிரம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.79 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, எச்.டி.எப்.சி. வங்கி, இன்போசிஸ், எல் அண்டு டி மற்றும் அல்ட்ராடெக்சிமெண்ட் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் இண்டஸ்இந்த் வங்கி, என்.டி.பி.சி., பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.79 ஆயிரம் கோடி லாபம்..
மகிந்திரா


மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,399 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,335 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 203 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.79 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.79 ஆயிரம் கோடி லாபம்..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 258.50 புள்ளிகள் உயர்ந்து 39,302.85 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 82.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,604.55 புள்ளிகளில் முடிவுற்றது.