முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… ரூ.1.17 லட்சம் கோடி லாபம்

 

முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… ரூ.1.17 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 288 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் நேற்று வர்ததகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது குறைவாக காணப்பட்டது போன்ற சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… ரூ.1.17 லட்சம் கோடி லாபம்
சன்பார்மா

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், சன்பார்மா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன், மாருதி, ஐ.டி.சி., ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ்ஆட்டோ மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… ரூ.1.17 லட்சம் கோடி லாபம்
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,583 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,162 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 167 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.29 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.17 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… ரூ.1.17 லட்சம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 287.72 புள்ளிகள் உயர்ந்து 39,044.35 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 81.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,521.80 புள்ளிகளில் முடிவுற்றது.