ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 98 புள்ளிகள் வீழ்ச்சி

 

ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 98 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் முதலில் ஏற்றம் கண்டு பின்பு சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 98 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் நல்ல ஏற்றம் கண்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. பங்கு வர்த்தகம் சரிவு கண்ட போதிலும் பல நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்தது.

ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 98 புள்ளிகள் வீழ்ச்சி
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், டெக் மகிந்திரா மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 98 புள்ளிகள் வீழ்ச்சி
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,827 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 929 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.26 லட்சம் கோடி லாபம் ஈட்டினர்.

ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 98 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 97.92 புள்ளிகள் சரிந்து 38,756.63 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 24.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,440.05 புள்ளிகளில் முடிவுற்றது.