தொடரும் பங்கு சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடரும் பங்கு சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.23 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, வாகன துறையை சேர்ந்த பங்குகளின் விலை உயர்ந்தது போன்ற பல காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இந்த வாரத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

தொடரும் பங்கு சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது..
பஜாஜ் ஆட்டோ

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடரும் பங்கு சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது..
பவர் கிரிட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,080 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,595 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 198 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.59 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.23 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தொடரும் பங்கு சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 304.38 புள்ளிகள் உயர்ந்து 39,878.95 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 76.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,738.85 புள்ளிகளில் முடிவுற்றது.