வாரத்தின் முதல் நாளில் தூள் கிளப்பிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..

 

வாரத்தின் முதல் நாளில் தூள் கிளப்பிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்கைளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 277 புள்ளிகள் உயர்ந்தது.

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. ஐ.டி. துறையை சேர்ந்த பங்குகளின் விலை இன்று நல்ல ஏற்றம் கண்டது. குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு விலை 7 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 16 காசுகள் குறைந்தது. முதலீட்டாளர்கள் நிறுவன பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்கு சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது.

வாரத்தின் முதல் நாளில் தூள் கிளப்பிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..
டி.சி.எஸ்.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், சன்பார்மா, இன்போசிஸ், டெக்மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்கின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

வாரத்தின் முதல் நாளில் தூள் கிளப்பிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,490 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,229 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 186 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.16 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.20 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

வாரத்தின் முதல் நாளில் தூள் கிளப்பிய பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி லாபம்..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 276.65 புள்ளிகள் உயர்ந்து 38,973.70 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 86.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,503.35 புள்ளிகளில் முடிவுற்றது.