சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, சியட், கோடக் மகிந்திரா வங்கி உள்பட பல நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள் சிறப்பாக இருநதது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..
கோடக் மகிந்திரா வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக்மகிந்திரா வங்கி, நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், என்.டி.பி.சி., மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி. நிறுவனம், ஓ.என்.ஜி.சி. மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..
எச்.டி.எப்.சி. நிறுவனம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,278 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,374 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 182 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.73 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 377 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் உயர்வு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 376.60 புள்ளிகள் உயர்ந்து 40,522.10 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 121.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,889.40 புள்ளிகளில் முடிவுற்றது.