சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்…

 

சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 7 காசுகள் குறைந்து ரூ.73.60ஆக வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.பி.ஐ. வங்கி உள்பட பல நிறுவனங்களின் நிதி முடிவுகள் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்…
மாருதி சுசுகி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி, மகிந்திரா அண்டு மகிந்திரா, பவர் கிரிட், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, என்.டி.பி.சி. மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயாந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்…
அல்ட்ராடெக் சிமெண்ட்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,689 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,027 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.46 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்தது…. முதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 127.01 புள்ளிகள் உயர்ந்து 40,685.50 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 33.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,930.35 புள்ளிகளில் முடிவுற்றது.