சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது…

 

சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது. பல முன்னணி நிறுவனங்களின் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள் சிறப்பாக இருந்தது, நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தன் தாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது…
பவர் கிரிட்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், நெஸ்லே இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது…
டி.சி.எஸ்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,367 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,292 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.60 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 162.94 புள்ளிகள் உயர்ந்து 40,707.31 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 40.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,937.65 புள்ளிகளில் முடிவுற்றது.