சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 4 புள்ளிகள் ஏற்றம் கண்டது…

 

சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 4 புள்ளிகள் ஏற்றம் கண்டது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு குறைந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக செயல்பட்டது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும், பங்கு வர்த்தகம் இறுதியில் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல்., கோடக்மகிந்திரா வங்கி மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன், சன்பார்மா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 4 புள்ளிகள் ஏற்றம் கண்டது…
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,153 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,481 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.39 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 4 புள்ளிகள் ஏற்றம் கண்டது…
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.71 புள்ளிகள் உயர்ந்து 40,625.51 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 3.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,934.50 புள்ளிகளில் முடிவுற்றது.