முதலீட்டாளர்களுக்கு 5 நாளில் ரூ.3.75 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 1,812 புள்ளிகள் உயர்ந்தது…

 

முதலீட்டாளர்களுக்கு 5 நாளில் ரூ.3.75 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 1,812 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் வர்த்தகம் நடைபெற்ற 5 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

கடந்த செப்டம்பர் மாத வாகன விற்பனை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நிலவரம், கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் வெளியிட தொடங்கி இருப்பது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. கடந்த 5 வர்த்தக தினங்களும் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.

முதலீட்டாளர்களுக்கு 5 நாளில் ரூ.3.75 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 1,812 புள்ளிகள் உயர்ந்தது…
கொரோனா வைரஸ் தடுப்பூசி

கடந்த திங்கள் முதல் நேற்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.69 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வியாழக்கிழமையன்று (அக்டோபர் 1ம் தேதி) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.94 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.75 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களுக்கு 5 நாளில் ரூ.3.75 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 1,812 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,812.44 புள்ளிகள் உயர்ந்து 40,509.49 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 497.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,914.20 புள்ளிகளில் முடிவுற்றது.