புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 704 புள்ளிகள் உயர்ந்தது…

 

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 704 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.11 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது, அதன் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ், ஐ.டி.சி. மற்றும் மாருதி ஆகிய 3 நிறுவனங்கள் பங்குகளின் விலை மட்டுமே குறைந்தது.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 704 புள்ளிகள் உயர்ந்தது…
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,508 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,183 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 191 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.165.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.11 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 704 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 704.37 புள்ளிகள் உயர்ந்து 42,597.43 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 197.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,461.05 புள்ளிகளில் முடிவுற்றது.