தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி லாபம்..

 

தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 553 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இந்திய சிமெண்ட்ஸ் உள்பட பல நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள் சிறப்பாக இருந்தது. சவுதி அரசின் பி.ஐ.எப். நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்லில் ரூ.9,555 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த தகவலால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை உயர்ந்தது இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி லாபம்..
மாருதி சுசுகி இந்தியா கார்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி சுசுகி இந்தியா, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி லாபம்..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,513 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,111 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 195 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.163.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.30 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 552.90 புள்ளிகள் உயர்ந்து 41,893.06 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 143.25 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,263.55 புள்ளிகளில் முடிவுற்றது.