இந்த வாரமும் காளையின் ஆதிக்கம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.42 லட்சம் கோடி லாபம்…

 

இந்த வாரமும் காளையின் ஆதிக்கம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.42 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த புதன்கிழமையும், இன்றும் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. அதேசமயம் மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் நல்ல விறுவிறுப்பாக இருந்தது. கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான சாதகமான தகவல்கள், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருவது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் ஆர்வமுடன் முதலீடு செய்வது மற்றும் சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது.

இந்த வாரமும் காளையின் ஆதிக்கம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.42 லட்சம் கோடி லாபம்…
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.174.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 20) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.171.72 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.42 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்த வாரமும் காளையின் ஆதிக்கம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.42 லட்சம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 267.47 புள்ளிகள் உயர்ந்து 44,149.72 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 109.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,968.95 புள்ளிகளில் முடிவுற்றது.