சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…

 

சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் வர்த்தகத்தில் கடும் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் சிறிய சரிவுடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,763 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,043 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.174.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.59 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 110.02 புள்ளிகள் சரிந்து 44,149.72 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 18.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,968.95 புள்ளிகளில் முடிவுற்றது.