சென்செக்ஸ் 432 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 432 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குச் சந்தையில் நவம்பர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ், டெக்மகிந்திரா மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 432 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்
டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,768 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 989 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 183 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.173.55 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 432 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 431.64 புள்ளிகள் உயர்ந்து 44,259.74 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 128.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,987 புள்ளிகளில் முடிவுற்றது.