புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி லாபம்..

 

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தத. சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்ந்தது.

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாக சாதகமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை குவித்து வருகின்றனர். சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி., டைட்டன் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி லாபம்..
கோவிட்-19 தடுப்பூசி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,635 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,176 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 189 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.174.86 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.42 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 445.87 புள்ளிகள் உயர்ந்து 44,523.02 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 128.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 13,055.15 புள்ளிகளில் முடிவுற்றது.