4 தினங்கள் மட்டுமே வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.44 லட்சம் கோடி கொடுத்த பங்குச் சந்தை..

 

4 தினங்கள் மட்டுமே வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.44 லட்சம் கோடி கொடுத்த பங்குச் சந்தை..

இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. சென்செக்ஸ் 244 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நேற்று மட்டும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது, மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தது, கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்திகள் போன்ற பல்வேறு இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது.

4 தினங்கள் மட்டுமே வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.44 லட்சம் கோடி கொடுத்த பங்குச் சந்தை..
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த செவ்வாய்கிழமை முதல் இன்று வரையிலான 4 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.171.72 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார சனிக்கிழமையன்று (நவம்பர் 14) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.169.28 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.44 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

4 தினங்கள் மட்டுமே வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.44 லட்சம் கோடி கொடுத்த பங்குச் சந்தை..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 244.27 புள்ளிகள் உயர்ந்து 43,882.25 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 88.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,859.05 புள்ளிகளில் முடிவுற்றது.