சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.68 லட்சம் கோடி லாபம்…

 

சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.68 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் ஏற்ற இறக்கமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், கோடக்மகிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இந்த் வங்கி, சன்பார்மா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.68 லட்சம் கோடி லாபம்…
ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,548 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,239 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 191 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.171.72 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.68 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 282 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.68 லட்சம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 282.29 புள்ளிகள் உயர்ந்து 43,882.25 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 87.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,859.05 புள்ளிகளில் முடிவுற்றது.