தொடர் வெற்றிக்கு விழுந்த முற்றுப்புள்ளி… சென்செக்ஸ் 580 புள்ளிகள் வீழ்ச்சி

 

தொடர் வெற்றிக்கு விழுந்த முற்றுப்புள்ளி… சென்செக்ஸ் 580 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.39 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர்கிரீட், ஐ.டி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர் வெற்றிக்கு விழுந்த முற்றுப்புள்ளி… சென்செக்ஸ் 580 புள்ளிகள் வீழ்ச்சி
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,324 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,433 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 181 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.170.04 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.39 லட்சம் கோடியை இழந்தனர்.

தொடர் வெற்றிக்கு விழுந்த முற்றுப்புள்ளி… சென்செக்ஸ் 580 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 580.09 சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து 43,599.96 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 166.55 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,771.70 புள்ளிகளில் முடிவுற்றது.