சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.87 ஆயிரம் கோடி லாபம்…

 

சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.87 ஆயிரம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, எல் அண்டி டி, இண்டஸ்இந்த் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டைட்டன் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.87 ஆயிரம் கோடி லாபம்…
மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,615 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,156 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 189 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.171.43 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.87 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.87 ஆயிரம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 227.34 புள்ளிகள் உயர்ந்து 44,180.05 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 64.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,938.25 புள்ளிகளில் முடிவுற்றது.