மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தது

 

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. பின்னர் ஏற்றம் கண்டது. ஆனால் அந்த ஏற்றம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பங்கு வர்த்தகம் ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்தது. இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எல் அண்டு டி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் டெக் மகிந்திரா உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தது
பாரத ஸ்டேட் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,587 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,071 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 198 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.168.32 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தது
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.81 புள்ளிகள் உயர்ந்து 43,443.00 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 29.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,719.95 புள்ளிகளில் முடிவுற்றது.