சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்

 

சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்

கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 236 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பாரத ஸ்டேட் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்
இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,551 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,144 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 191 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.167.52 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.8 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 236.48 புள்ளிகள் சரிந்து 43,357.19 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 58.35 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,690.80 புள்ளிகளில் முடிவுற்றது.