மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..

 

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 316 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்பு திடீரென சரிவை சந்தித்தது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் விறுவிறுவென ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டைட்டன் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..
ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,431 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,294 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 207 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.167.44 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 316.02 புள்ளிகள் உயர்ந்து 43,593.67 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 118.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,749.15 புள்ளிகளில் முடிவுற்றது.