பங்குச் சந்தையில் கடந்த 4 நாளில் ரூ.5.46 லட்சம் கோடி லாபம்…. முதலீட்டாளர்கள் குஷி….

 

பங்குச் சந்தையில் கடந்த 4 நாளில் ரூ.5.46 லட்சம் கோடி லாபம்…. முதலீட்டாளர்கள் குஷி….

ஈகை பெருநாளை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. அதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்கிழமையன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. ஆக ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

பங்குச் சந்தையில் கடந்த 4 நாளில் ரூ.5.46 லட்சம் கோடி லாபம்…. முதலீட்டாளர்கள் குஷி….

கடந்த 4 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ. லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.127.09 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.46 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தையில் கடந்த 4 நாளில் ரூ.5.46 லட்சம் கோடி லாபம்…. முதலீட்டாளர்கள் குஷி….

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,751.51 புள்ளிகள் உயர்ந்து 32,424.10 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 549.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,580.30 புள்ளிகளில் முடிவுற்றது.