பங்குச் சந்தையில் மீண்டும் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்தது

 

பங்குச் சந்தையில் மீண்டும் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது.

பங்குச் சந்தையில் மீண்டும் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்தது

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி, ஹீரோமோட்டோகார்ப், எச்.டி.எப்.சி.வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, மாருதி மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், ஐ.டி.சி., ஸ்டேட் வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தையில் மீண்டும் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,527 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 808 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.125.49 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.87 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தையில் மீண்டும் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்தது

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 595.37 புள்ளிகள் உயர்ந்து 32,200.59 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 171.00 புள்ளிகள் அதிகரித்து 9,485.95 புள்ளிகளில் நிலைகொண்டது.