பங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்தது..

 

பங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்தது..

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. பங்குச் சந்தையில் வங்கி துறையை சேர்ந்த பங்குகளின் விலை இன்று உயர்ந்தது. நாளை மே மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும் நிலையில் இன்று பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

பங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்தது..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் சன்பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் மற்றும் மாருதி உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்தது..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,380 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 946 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.123.62 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்தது..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 995.92 புள்ளிகள் உயர்ந்து 31,605.22 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 285.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,314.95 புள்ளிகளில் முடிவுற்றது.