சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… ரூ.1.38 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

 

சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… ரூ.1.38 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது இருப்பினும் பின்பு படிப்படியாக சரிவு காண தொடங்கியது. இறுதியில் பெரிய வீழ்ச்சியுடன் பங்கு சந்தைகளில் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, சன்பார்மா, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… ரூ.1.38 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,117 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,459 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.134.70 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.38 லட்சம் கோடியை இழந்தனர்.

சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… ரூ.1.38 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 413.89 புள்ளிகள் வீழ்ந்து 33,956.69 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 120.80 புள்ளிகள் இறங்கி 10,046.65 புள்ளிகளில் நிலை கொண்டது.