தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த சென்செக்ஸ்.. ரூ.42 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த சென்செக்ஸ்.. ரூ.42 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் படிப்படியாக சரிவு காண தொடங்கியது. பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று நிலையில்லாமல் இருந்தது. எம்.ஆர்.எப். உள்ளிட்ட சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு கை கொடுக்கவில்லை. இறுதியில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறிய சரிவுடன் முடிவடைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த சென்செக்ஸ்.. ரூ.42 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா, மாருதி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட், சன்பார்மா, பார்திஏர்டெல், ஓ.என்.ஜி.சி. பஜாஜ் பைனான்ஸ், மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த சென்செக்ஸ்.. ரூ.42 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,286 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,475 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 139 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.139.16 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த சென்செக்ஸ்.. ரூ.42 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.72 புள்ளிகள் சரிந்து 34,915.80 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 10.30 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 10,302.10 புள்ளிகளில் முடிவுற்றது.