பங்குச் சந்தையில் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்ந்தது…

 

பங்குச் சந்தையில் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3வது நாளாக இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் நல்ல உயர்வுடன் தொடங்கியது. கடந்த சில நாட்களாக அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் நிறுவன பங்குகளை வாங்கி குவித்து வருகின்றனர். மேலும் பிரிட்டானியா உள்ளிட்ட சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்குவர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

பங்குச் சந்தையில் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்ந்தது…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் மகிந்திரா அண்டு மகிந்திரா, கோடக்மகிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி., இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் மாருதி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தையில் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்ந்தது…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,658 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 861 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.13 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தையில் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்ந்தது…

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 284.01 புள்ளிகள் உயர்ந்து 34,109.54 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 82.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,061.55 புள்ளிகளில் நிலைகொண்டது.